சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Sunday, January 30, 2011

ரயில்வே தேர்வின் லட்சணம்

நான் 12 வருடங்களுக்கு முன்பு ரயில்வேயில் அப்பரன்டிஸ் முடித்து அங்கு வேலை கிடைக்காமல் வேறு துறைக்கு சென்று விட்டேன். நீண்ட நாட்களுக்கு பிறகு இப்பொழுது தான் நுழைவு தேர்விற்கான அனுமதி சீட்டு வந்தது. சரி என்று என்று எழுத சென்றேன். ஆனால் என்ன கொடுமை பாருங்கள். நான் முடித்தது ரயில் கட்டுமான பயிற்சிக்கு. ஆனால் எனக்கு கேள்வித்தாளில் இருந்தது அதற்கு சம்மந்த மில்லாத கேள்விகள். மொத்தம் 90 கேள்விகள். அதில் பொது அறிவு சம்மந்தமாக 30 கேள்விகள், கணக்கு சம்மந்தமாக 30 கேள்விகள், மின்துறை சம்மந்தமாக 30 கேள்விகள். அவ்வளவு தான். எனக்கு பரவாஇல்லை. ஆனால் என்னுடன் என்னுடன் படித்த நண்பர்கள் ஒன்றுமே எழுதவில்லை, அவர்களுக்கு எழுதியதும் தெரிந்து விட்டது, தேர்வில் தோல்வி தான் என்று. நான் கணக்கு மற்றும் பொது அறிவு கேவிகள் அனைத்தும் சரியாக எழுதி விட்டேன். மின்துறை சம்மந்தமான கேள்விகளில் 20 சரியாக இருக்கும். இந்த லட்சணத்தில் கேள்வியை கேட்டால் மற்றவர்கள் எப்படி எழுதுவார்கள். இவர்களில் தேர்வானவர்கள் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் எப்படி ரயில் பெட்டி செய்வார்கள். அவர்களுக்கே வெளிச்சம். அரசு துறை இப்படி உள்ளது.
வாழ்க கேள்வி தயார் செய்தவர்கள்.
செந்தில்

1 comment:

  1. ஓரு நாளைக்கு 4 - 5 Hrs , Share market- ல் இருப்பதால் ..
    sunday tv போர் அதான்..
    http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_30.html

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...