சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, September 20, 2011

காபரே நடனம் பார்க்க போய் வாங்கி வந்த முத்தம்

இதையெல்லாம் வெளியில் சொல்வார்களா என்ன. இருந்தாலும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது அதனால் சொல்கிறேன். அப்பொழுது எனக்கு வயது 15. இன்று மன்னார்குடி பேருந்து நிலையம் எதிரில் புட் பிளாசா என்று உணவகம் வைத்திருக்கும் என் அத்தை மகன் சதீஷ் என் வயதை ஒத்தவன். நாங்கள் அந்த வயதில் எங்கு கரகாட்டம், கிளப் டான்ஸ் நடந்தாலும் அங்கு சென்று விடுவோம். ஒரு முறை அவர்கள் ஊரான மேலவாசல் அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் கிளப் டான்ஸ் நடப்பதாகவும் ஐந்து ரூபாய் டிக்கெட் என்றும் கேள்விப்பட்டு அங்கு சென்றோம். எங்களுக்கு சிறிய வயது என்பதாலும் நாங்கள் அரைக்கால்சட்டை அணிந்திருந்ததாலும் உள்ளே விட மறுத்து விட்டார்கள். பிறகு மறுபடியும் சைக்கிளில் வீட்டிற்கு சென்று யாருக்கும் தெரியாமல் எங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களின் வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு மறுபடியும் அந்த ஊர் சென்று டிக்கெட் வாங்கி உள்ளே சென்று டான்ஸ் பார்க்க அமர்ந்தோம், சிறிது நேரத்தில் டான்ஸ் துவங்கியது . அப்பப்பப்பா நடனமாடிய பெண்ணின் வாளிப்போ அருமை.

ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் வெளியில் இருந்து ஒருவன் போலீஸ் என்று கத்திக் கொண்டு உள்ளே வந்தான். எல்லோரும் டெண்ட் கொட்டாயை பிரித்துக் கொண்டு பறந்தார்கள். நாங்கள் ஒடினோம். நாங்கள் சிறிய வயது பையன்கள் என்பதால் நடனமாடிய அந்த பெண்ணும் எங்களுடன் ஒடி வந்தார். சிறிது தூரம் ஓடி ஒரு வைக்கப்போரின் பின் சென்று அமர்ந்தோம் எங்களுடன் அவளும் அமர்ந்தாள். சிறிது நேரம் கழித்து அவள் எங்களுடன் பேசினாள். நானும் நீ என்ன செய்கிறாய், எப்படி இந்தவாறு நடனமாடுகிறாய் என்று கேட்டேன். அவளோ தான் மதுரை பக்கம் என்றும் வீட்டுத்தேவைக்காக நடனமாடி பிழைக்க வந்ததாகவும் கூறினாள். தனக்கு ஒரு புடவை தேவை என்றும் கிடைத்தால் கட்டிக் கொண்டு ஊர் சென்று விடுவதாகவும் கூறினாள். பிறகு நானும் என் மச்சானும் எங்கள் வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ள ஒரு புடவையை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து கொடுத்தோம். அவள் வாங்கி கட்டிக் கொண்டு செல்லும் போது எங்கள் இருவருக்கும் முத்தம் கொடுத்து சென்றாள். ஆஹா அன்று நாங்கள் ஊருக்கு சென்று எங்கள் வயதை ஒத்த நண்பர்களிடம் சொல்லி கர்வப்பட்டு கொண்டிருந்தோம்.

இன்று நினைத்துப் பார்த்தால் அதெல்லாம் சிரிப்பாக இருக்கிறது.

பழைய நினைவுகளுடன்


ஆரூர் முனா செந்திலு




2 comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...