சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, January 10, 2014

நேனொக்கடைனே - தெலுகு

பொதுவா தெலுகுல மாஸ் ஹீரோக்கள் ஒரே டெம்ப்ளேட்ல தான் படத்தை எடுத்துத் தள்ளுவாங்க. காமெடி, ஹீரோயிசம், சென்ட்டிமெண்ட், ஆக்சன் பாடல்கள் எல்லாம் சரிவிகிதத்தில் கலக்கப்பட்டு 15 நிமிடத்திற்கு ஒன்று என செட் செய்யப்பட்டு பறிமாறப்படும்.


மகேஷ்க்கு கூட பிஸினஸ்மேன் வரை அப்படித்தான் படங்கள் அமைந்து கொண்டு இருந்தது. சீதம்மா வகிட்லோ செருமல்லி செட்டு படத்தில் அத்தனை மாஸ் விஷயங்களையும் தூக்கிப் போட்டு விட்டு காஸ்ட்யூம் கூட சாதாரண சட்டை பேண்ட் போட்டு தான் நடித்தார். 

இங்கு விஜய் அஜித்துக்கு உள்ள மாஸை விட மகேஷ்க்கு ஆந்திராவில் அதிகம். அந்த நிலையில் சீதம்மா படம் எல்லாத்தரப்பு மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. படம் பெருவெற்றி பெற்றது. எனக்கும் கூட மிகவும் பிடித்தது.

நான் மகேஷ்க்கு தீவிர ரசிகன். இந்த ரசிப்புத்தன்மை எங்கு துவங்கியது என்று பின்னோக்கி யோசித்துப் பார்க்கிறேன். திருப்பதிக்கு நான் ஒரு திருமணத்திற்காக 2001ல்  சென்றிருந்த போது வித்தியாசமான பேனரை கண்டேன். 


பெரிய அளவு முத்துக்களால் தெலுகில் எழுதப்பட்டு பார்வைக்கு வித்தியாசமாக இருந்தது. நண்பனிடம் கேட்ட போது மகேஷ் பற்றிய விவரங்களை கூறினான். அந்த சமயத்தில் எனக்கு தெலுகில் ஒரு வார்த்தை கூட தெரியாது.

பேனர் வசீகரித்ததால் பார்த்த படம் முராரி. ஆனால் படம் முடிந்து வந்ததும் நான் மகேஷ்க்கு தீவிர ரசிகனாகி விட்டேன். அதன் பிறகு எப்பொழுது மகேஷ் படம் வந்தாலும் அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் பார்த்து விடுவேன். தெலுகு கற்றுக் கொண்ட பிறகு ரசிப்புத்தன்மை இன்னும் கூடியது.


காதில் பூ சுற்றுகிற சமாச்சாரம் என்றாலும் அது தெலுகு படம் என்பதாலும் நடித்திருப்பது மகேஷ் என்பதாலும் லாஜிக் பற்றி யோசிக்காமல் ரசித்துப் பார்ப்பேன். இத்தனை ரசிகனான என்னை இந்த படம் திருப்தி படுத்தியிருக்கிறதா என்பதை பார்ப்போம்.

ஒரு வருடம் கழித்து மகேஷ் படம் வந்திருப்பதால் நான் எதிர்பார்த்து போனது தூக்குடு மாதிரியான படத்தை தான். ஆனால் இது முற்றிலும் வித்தியாசமான திரைக்கதை உடைய அப்நார்மல் தெலுகு திரைப்படம்.

பெரும்பாலான மகேஷ் ரசிகர்களுக்கு படம் பிடிக்குமா என சந்தேகம் தான். படத்தில் நகைச்சுவைகள் இல்லை. பதிலுக்கு பதில் ஆக்சன் இல்லை. இன்னும் நிறைய இல்லை. படத்தின் முதல் பாதி முழுக்க காற்றில் கத்தி வீசுகிறார்.அதுவே அலுப்பை தட்டுகிறது.


படம் துவங்கியதும் நடக்கும் கொலை கற்பனை என்று தெரிய வந்ததும் அதற்கடுத்த காட்சிகளில் இது நிஜமா கற்பனையா என நம் ஜேம்ஸ்பாண்டு மூளை யோசிக்கத் தொடங்குவதால் படத்தின் விறுவிறுப்பு அடிபட்டு போகிறது. இன்டர்வெல் மர்டர் மட்டுமே நாம் பார்ப்பது மகேஷ் படம் என்பதை நினைவுபடுத்துகிறது.

இந்த படம் ஒரு வகையில் தமிழில் வெளிவந்த சமர் படத்துக்கு தூரத்து சொந்தம் தான். 

தனது தாய் தந்தையை கொன்ற மூவரை தான் கொன்று விட்டதாக மகேஷ் காவல்நிலையத்தில் சரணடைகிறார். ஆனால் அவர் சொன்னது பொய் என்பதும் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை எனவும் தெரிய வருவதால் மகேஷ்க்கு மனநோய் என மற்றவர்கள் நம்பத் தொடங்குகிறார்கள்.

அதற்கேற்றாற் போல் இவருக்கு நடக்கும் சம்பவங்கள் மற்றவர்களுக்கு தெரிய வராததால் அவை அனைத்தும் மகேஷின் கற்பனை என்றே மற்றவர்களால் நம்பப் படுகிறது. ஒரு கட்டத்தில் இவரை காதலிக்கும் ஹீரோயினுக்கு ஒரு பிரச்சனை வர அவரை மகேஷ் காப்பாற்றுவதால் ஹீரோயின் நம்புகிறார். 

அதன் பிறகு அந்த மூவர் யார், அவர்களுக்கு என்னவானது தனது பெற்றோர் யார் என்பதை லண்டன் சென்று தேடி கண்டுபிடிக்கிறார் மகேஷ். நடந்தது எல்லாம் கற்பனை. கற்பனையாக அவர் நினைப்பது எல்லாம் நடந்தது என மண்டையை காய வைத்து இருக்கிறார்கள்.

படத்தில் சிறுவயது மகேஷ்ஷாக அவரது சொந்த மகன் கௌதம் நடித்துள்ளார். ஒரு வாரிசு உருவாக தொடங்கியுள்ளது. இப்படித்தான் கிருஷ்ணா அவரது படங்களில் சிறுவயது மகேஷை நடிக்க வைத்து ஹீரோ மெட்டீரியலாக உருவாக்கினார்.

நாயகி க்ரிடிசனான் என்னா பிகரு என்னா கலரு, தெலுகுகாரனுங்க கொடுத்து வச்சவனுங்க. நல்ல நல்ல நாயகிகளையெல்லாம் வளைத்துப் போட்டு விடுகிறார்கள்.

முதல் பாதியில் ஏதோ சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்க்க வைத்து இரண்டாம் பாதியில் சொதப்பலாக சொல்லியிருப்பதால் படம் சுமார் தான். எனக்கு தலையை வலிக்கிறது. இதுக்கு மேல யோசிக்க முடியலை. அதனால் இந்த பதிவை விமர்சனம்னு நீங்களே நினைச்சிக்கங்க.

ஆரூர் மூனா

4 comments:

  1. Enga boss unga " veeram " ...?
    We're waiting

    ReplyDelete
  2. இன்னிக்கு முதல் காட்சி ஜில்லாவும் இரண்டாவது காட்சி வீரமும் பார்த்துவிட்டு மூனாவதா இந்தப்படத்தைப்பார்க்கலாம்னு க்யூ ல நிக்கும்போது உள்ள இருந்து ஒரு மனவாடு தலைல அடிச்சுகிட்டே வெளில வந்தான்.

    இவனுக்கே பிடிக்கல அப்படின்னு தெரிஞ்சதும் ஆபீஸ்க்கு ஓடிட்டேன் :)

    ReplyDelete
  3. ரெண்டு வாட்டி பாத்தா தான் புரியும்ன்றாய்ங்க... நானும் மகேஷ் ரசிகர் தான் நண்பா. இவர் வருஷத்துக்கு ஒன்னு தான் நடிக்கிறார் அதான் வருத்தமா இருக்கு...

    ReplyDelete
  4. intha padam oru different attempt maheshku sir. avarukku theriyatha ithu mathiri padam edutha makkal virumpa mattanganu.
    athaiya ellam thandi eduthu irukkumpothu avarai parattanum than enakku thonuthu.

    avaroda fans ke padam puriyala.
    but padam purinjavan nalla irukku solluran. puriyathavan nalla illanu solluran.
    nethu padam parthen.
    vithyasamana oru padam athvum maheshbabu.
    enakku padam ok tan sir.



    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...